களுத்துறை சதொச களஞ்சியத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவரை கைது செய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரை உடைந்த கண்ணாடியினால் கீறி காயப்படுத்திய திருடனை பொலிசார் கைது செய்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், திருடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கில் உள்ள சதொச சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு முயற்சி தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
சந்தேக நபரை கைது செய்ய முயன்ற போது சந்தேக நபர் அருகில் உள்ள கண்ணாடியை எடுத்து பொலிஸ் சார்ஜெண்டின் வலது கையை தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேகநபர் கைதாகினார்.



