நாவாந்துறையில் இளைஞர்கள் ‘அடிவாங்கிய’ வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

Date:

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவாந்துறை, சோழபுரத்தில் வீடொன்றின் மீது பொற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், அவை புஸ்வாணமாகி விட்டன.

நாவாந்துறையில் புறா வளர்ப்பாளர்களிற்கிடையிலான தகராற்றை தொடர்ந்து ஏற்பட்ட விபரீதங்களால் ஒரு இளைஞன் உயிரை மாய்த்ததாக உறவினர்களால் குற்றம் சுமத்தப்படுகிறது.

16 வயதான இளைஞன் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து இளைஞர் குழு தாக்கியதை தொடர்ந்து இந்த விபரீதம் ஏற்பட்டது.

அந்த வீட்டிலேயே பின்னர் பெண்களிடம் அடி வாங்கி மன்னிப்பு கேட்க இளைஞர்கள் சென்றனர். அங்கு மிளகாய்த்தூள் வீசி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சர்ச்சையையடுத்து வீட்டிலிருந்தவர்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை அவர்கள் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை அவதானித்துள்ளனர்.

3 பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட போதும், அவை வெடிக்கவில்லை.

வீட்டின் வெளி தகரக் கதவு வாளால் வெட்டப்பட்டு, தீ மூட்டப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்