கோடிகளை குவித்த கமலின் ‘விக்ரம்’: புதிய சாதனை!

Date:

கோடிகளை குவித்த கமலின் ‘விக்ரம்’: புதிய சாதனை!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா இரண்டாம் அச்சுறுத்தல், சட்டமன்ற தேர்தல் போன்ற காரணங்களால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்தல் முடிந்த கையோடு படத்தில் பணியாற்ற உள்ள மற்ற டெக்னீஷியர்கள் குறித்த அப்டேட்யும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் அண்மையில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலானது. இந்நிலையில் கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை வாங்கியுள்ளது.

சமீபகாலமாக தென்னிந்திய படங்களின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்படுகிறது. இந்தி தொலைக்காட்சிகளிலும் தென்னிந்திய படங்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. அத்துடன் யூடியூபிலும் இந்த டப்பிங்குகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. வெற்றிமாறனின் அசுரன் படத்தின் இந்தி டப்பிங்கும் யூடியூப்பில் 4 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விக்ரமின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் 35 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. கமலின் எந்தப் படமும் இதுவரை இத்தனை பெரிய தொகைக்கு விலைபோனதில்லை. படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிப்பதால் பாலிவுட்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு விக்ரம் படம் விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்