28.7 C
Jaffna
April 12, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறை நகரில் தனியார் வங்கியில் கொரோனா தொற்றாளர்கள்: வங்கி மூடப்பட்டது!

முடக்கப்பட்ட பருத்தித்துறை நகரில் இன்று இயங்கிய வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பிசிஆர் சோதனையில், வங்கியொன்றில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று இரவு தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பருத்தித்துறை நகர பகுதியில் இன்று எழுமாற்றான அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.

இதில் இருவர், பருத்தித்துறை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் உத்தியோகத்தர்கள்.

இதையடுத்து, வங்கி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பகுதியில் 49 பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் நடத்தப்பட்ட அன்டிஜன் சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

மேலும் 33 பேரின் பிரிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!