பொதி சேவையைப் பயன்படுத்திப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குடு நோனி என்றழைக்கப்படும் பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், பொதி சேவையை பயன்படுத்தி, நாடளாவிய ரீதியில் இவ்வாறு போதைப்பொருள்களை மிகவும் நூதனமான முறையில் விநியோகம் செய்துவந்துள்ளார்.
39 வயதான குடு நோனி கொம்பனித்தெருவை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.
கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர், கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குடு நோனியை கைது செய்ததாக, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அனுராதபுரத்துக்கு பொதியொன்றை அனுப்பிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



