வடமாகாணத்தில் இன்று (11) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 66 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் வடக்கை சேர்ந்தவர்கள் 60 பேர். தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 6 பேர் உ்ள்ளங்குகின்றனர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று 850 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதில் 66 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 பேர், என 47 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தில், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் 5 பேர் என, 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
வவுனியா, சித்த வைத்தியசாலயில் 4 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
இதுதவிர, அக்கராயன்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் 4 பேரும், யாழ் தனிமைப்படுத்தல் மையமொன்றில் 2 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.