மோசடிப் பெண் கைது!

Date:

ஜப்பான் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, நாட்டின் பல பாகங்களிலும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நவகமுவ பொலிசார் கைது செய்துள்ளனர். கடுவெல பகுதியில் அவர் கைதானார்.

தெஹியோவிட்டவை சேர்ந்த 49 வயதுடையவரே கைதாகினார்.

அந்தப் பெண் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஜப்பானுக்கு அனுப்புவதாகக் கூறி ஏராளமான பணத்தை மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது.

நவகமுவ பகுதியில் 8,00,000 ரூபா மோசடி தொடர்பாக பொலிசாருக்கு செய்யப்பட்ட மோசடியை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக 32 வழக்குகளும் 17 நீதிமன்றங் பிடியாணைகளும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் இன்று (11) கடுவெல  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் கேட்டதால் பேச்சு நடத்த தயார்… ஆனால் போர் நிறுத்தம் முறிந்து விட்டது!

பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரியதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் போர்...

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர்...

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்