இந்தோனேசியாவிலிருந்து ஓகஸ்ட் 2020 இல் இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த பாக்கு தொடர்பாக வழங்கப்பட்ட போலி தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் தொடர்பாக இரண்டு விவசாய திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஒருவரும், விவசாய போதனாசிரியர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கம் அளித்த புகாரின் பேரில் குற்றவியல் புலனாய்வுத் துறை இது குறித்து விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் சிஐடியினர் வாக்குமூலம் பெற்ற போது, இரு அதிகாரிகளும் கொள்கலன்களை முழுமையான ஆய்வு செய்யாமல் சான்றிதழ்களை வழங்கியிருப்பது தெரியவந்தது.
சிஐடி இந்த விஷயத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



