மாத்தளை மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொகாஹகொடுவ கிராம சேவகர் பிரிவில் ஹரஸ்கம கிராமம் மற்றும் அகலவத்த கிராமம் ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 5 கிராமங்களும், த்தளை மாவட்டத்தின் மகாவெல பொலிஸ் பிரிவில் இரண்டு கிராமங்களும் னிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.




