2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் போதனைகளில் கலந்து கொண்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்லவை சேர்ந்த 32 வயதான சந்தேக நபரே கைதானார்.தற்போது அவர் ஒன்லைனில் ஆடை பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைத் துறையால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்.
இத்தகைய தீவிரவாத வகுப்புகளில் கலந்து கொண்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.




