தென்மராட்சி பகுதியில் அயலவர்களிற்கிடையில் இன்று இடம்பெற்ற மோதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மீசாலை, பங்களா வீதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
அயல் வீட்டுக்காரர்களிற்குள் ஏற்பட்ட தகராறு முற்றி, மோதலாகியுள்ளது. அயல் வீட்டு குழுவொன்று, வீடு புகுந்து தாக்கியதில் பா.கருணாமூர்த்தி (56), மனைவியான கருணாமூர்த்தி ரோகிணி (46), மகன் க.தனுசன் (26) ஆகியோரும், அயல்வீட்டு தரப்பில் ஐ.நடேசபிள்ளை (63) என்பவரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1