விதவிதமான விநாயகரும் விரத வழிபாட்டு பலன்களும்..

Date:

எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அதற்கேற்ப பிள்ளையார் வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது.

  • மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.
  • குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும்.
  • புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும்.
  • வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
  • உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.
  • வெள்ளை எருக்கம் இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.
  • விபூதி கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
  • சந்தனத்தால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
  • சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.
  • வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
  • வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்