இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் மொகமட் சாட் கட்டாக் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வந்திருந்தார்.
யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் தலைமையிலான குழுவினர் அவரை வரவேற்று, கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும், சந்திப்பில் கலந்து கொண்டார்.
யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் தூதருக்கு காணொளி முறையில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், திணைக்கள தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




