32.3 C
Jaffna
April 28, 2024
விளையாட்டு

இந்திய அணி இலங்கை வந்தடைந்தது!

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை-இந்திய அணிகளிற்கிடையில் ஒருநாள், ரி20 போட்டி தொடர் ஜூலை 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

வழக்கமான இந்திய கப்டன் விராட் கோலி மற்றும் துணை கப்டன் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் தவான் தனது வாழ்க்கையில் முதல் முறையாக தேசிய அணியை வழிநடத்துகிறார்.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த சுற்றுப்பயணத்தில் துணைக் கப்டனாக செயற்படுவார்.

முன்னாள் இந்திய கப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் ராகுல் டிராவிட் 20 பேர் கொண்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

இலங்கைக்கு புறப்படுவதற்கு முன் இந்திய அணி மும்பையில் இரண்டு வார தனிமைப்படுத்தலில் இருந்தனர்.

ஒருநாள் தொடர் ஜூலை 13 ஆம் திகதி தொடங்கி ஜூலை 18 ஆம் திகதியுடன் முடிவடையும்.

மூன்று ரி20 போட்டிகளை கொண்ட தொடர் ஜூலை 21, 23, மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறும். அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை வீரருக்கு மரண அடி: மும்பையை வீழ்த்தியது டெல்லி!

Pagetamil

ரி20 உலகக்கிண்ண தொடர் விளம்பரத்தூதர் உசைன் போல்ட்

Pagetamil

மகளிர் ஒருநாள் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் சாமரி அத்தப்பத்து முதலிடம்!

Pagetamil

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

Pagetamil

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

Leave a Comment