இலங்கை

கௌதாரிமுனை சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்க்க சென்ற எம்.பிகள் பாதை சரியில்லை என திரும்பினர்!

கௌதாரிமுனையில் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதை சரியில்லை என திரும்பி விட்டனர்.

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கடலட்டை பண்ணை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (28) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சென்றிருந்தனர். இருப்பினும் அவர்கள் குறித்த இடத்திற்கு செல்லாது திரும்பிவிட்டனர்.

இது தொடர்பில் பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கையில்-

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை சென்று பார்வையிடுவதற்காக இன்று வருகை தந்தனர். இருப்பினும் அவர்கள் மண்ணித்தலை கோவிலுடன் திரும்பி விட்டனர். அதற்கப்பால் செல்வதற்கு பாதை
சரியில்லை எனவும் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று தெரிவித்து விட்டு திரும்பி விட்டனர். இதற்கு நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடிவர்கள் பின்னர் இவ்வாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர் என அவர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் சிலை உடைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்!

Pagetamil

என் மீதான 5 குற்றச்சாட்டுக்களும் ஆச்சரியமளிக்கின்றன: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர்!

Pagetamil

வெடியரசன் கோட்டையில் கடற்படையின் அறிவித்தல் பதாகை அகற்றப்பட்டது; நெடுக்குநாறி சிவன் ஆலயம் மீளக்கட்டப்படும்: அமைச்சர் டக்ளஸ்!

Pagetamil

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களிற்கு அமைச்சர் மிரட்டல்!

Pagetamil

வடக்கு ஆளுனர் பதவியை தக்க வைப்பதற்காக இனஅழிப்பிற்கு துணைபோகிறார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!