இரசாயன உரம் கோரி சிறுதோட்ட உரிமையாளர்கள் போராட்டம்!

Date:

தேயிலைத் தோட்டங்களுக்கு இரசாயன உரங்களை வழங்குமாறு அரசாங்கத்தை கோரி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் இன்று கண்டி, கண்ணொருவவில் போராட்டம் நடத்தினர்.

கண்டி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்பகொட செனவிரத்ன ஊடகங்களுடன் பேசுகையில், நாடு முழுவதும் சுமார் 500,000 தோட்டக்காரர்கள் மற்றும் தொடர்புடைய  2.5 மில்லியன் பேர் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு பொறுப்பான  அமைச்சருடன் கலந்துரையாடல் பயனற்றது என்பதால் இந்த விஷயத்தை ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இரசாயன உரத்தை ஒரு தீங்கு விளைவிக்கும் அங்கமாகக் கருதினால், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், விஞ்ஞானிகள் மற்றும் துறையில் நிபுணர்களின் உதவியுடன் ஒரு மாற்றீட்டை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

தேயிலைத் தோட்டங்களின் வருமானம் ஒரு மாத காலத்தில் 225 புதிய வாகனங்களை வாங்குவதற்கு போதுமான நிதியைக் கொண்டு வரக்கூடும் என்று அவர் கூறினார்.

இரசாயன உரத்தின் பிரச்சினைக்கு மாற்று தீர்வை அறிமுகப்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்,

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்