கம்பஹா மாவட்டத்தில் நேற்று 436 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று நாட்டில் 2,196 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 246,109 ஆக உயர்ந்தது.
களுத்துறை மாவட்டத்தில் 324 பேர், கொழும்பு மாவட்டத்தில் 318 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் 178 பேர், குருநாகல் மாவட்டத்தில் 121 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டத்தில் தலா 71 பேர், காலி மாவட்டத்தில் 65 பேர், அம்பாறை மாவட்டத்தில் 61 பேர், மாத்தறை மாவட்டத்தில் 51 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 45 பேர், கேகாலை மாவட்டத்தில் 44 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், மாத்தளை, புத்தளம் மாவட்டத்தில் தலா 34 பேர், வவுனியா மாவட்டத்தில் 26 பேர், மொனராகலை மாவட்டத்தில் 23 பேர், மன்னார் மாவட்டத்தில் 16 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 11 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9 பேர், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா 6 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.