கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

Date:

நுவரெலியா மாவட்டம் கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட களுதுமெத கிராம சேவகர் பிரிவு, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர் பிரிவு, பெரமான தெற்கு கிராம சேவகர் பிரிவு, டன்சினன் கிராம சேவக பிரிவு மற்றும் கொரகஓயா கீழ்பிரிவு கிராம சேவகர் பிரிவு, ஆகியன இன்று 21.06.2021 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இந்த கிராம சேவகர் பகுதிகளில் 168 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம்

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்...

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஈரானின் 10 அம்ச திட்டத்தின் உள்ளடக்கம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஈரான் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்