ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து: 5 பேர் பலி!

Date:

சுவிட்சர்லாந்து மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் கடந்த சனிக்கிழமை பயணித்தன. ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்தார். மற்றொரு விமானத்தில் குழந்தை உள்பட 4 பேர் பயணித்துள்ளனர். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் கிழக்கே ஹுபர்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இருப்பினும், 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மாயமானதாக தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த சிறிய ரக விமானத்தை தேடும் பணியில் மட்டும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர் 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஹுபர்டன் பகுதியில் விபத்துக்குள்ளானதை மீட்புகுழுவினர் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே மற்றொரு சிறிய ரக விமானத்தையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். அந்த விமானத்தில் விமானி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 5 பேரின் உடல்களையும் மீட்ட மீட்புக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்