கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 8 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.
வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
கொவிட் நிமோனியா காரணமாக குழந்தை உயிரிழ்துள்ளது.
குழந்தையின் பெற்றோரிடமிருந்து தொற்று உறுதியாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. பெற்றோரிற்கு இன்னும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவில்லை.



