இளம் பெண்ணிற்கு கோடி கணக்கில் நஷ்ட ஈடு கொடுத்த ஆப்பிள்!

Date:

கடந்த 2016 ஆப்பிளின் காண்ட்ராக்டர் நிறுவனமான பிகேட்ரான் நிறுவனத்தின் ஊழியர்கள் ரிப்பேருக்கு வந்த செல்போனிலிருந்த பெண்ணின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததால் அந்த பெண்ணிற்கு ஆப்பிள் நிறுவனம் கோடிகணக்கில் நஷ்ட ஈடு கொடுத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃப்போர்னியா மாகாணத்தில் வசித்த 21 வயது மாணவி ஒருவர் தனது ஐபோனில் கேளாறு ஏற்பட்டதால் அருகில் உள்ள ஆப்பிள் நிறுவன காண்ட்ராக்டரான பிகேட்ரான்என்ற ஐபோன் சர்வீஸ் செய்யும் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் அந்த செல்போனை ரிப்பேர் செய்த சிலர் அந்த செல்போனில் உள்ள அந்த பெண்ணின் அந்தரங்க/நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளனர். அதை அவர்கள் அந்த பெண்ணின்
பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதை கேள்விபட்டதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். கிட்டத்தட்ட அந்த பெண்ணின் செல்போனில் உள்ள 10 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்தும் அந்த பெண் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்துள்ளார். ஆனால் அதற்குள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலராக பார்க்கப்பட்டு பகிரப்பட்டுவிட்டது.

இதையடுத்து அந்த பெண் பிகேட்ரான்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். அதில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்றும் தனது தனிப்பட்ட தகவல்களை ஆப்பிள் நிறுவன காண்ட்ராக்டர் பிகேட்ரான்திருடி அதை முறைகேடாக பயன்படுத்தி தன்னை அவமானப்படுத்திவிட்டது. என்று குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், தனக்கு மான நஷ்டமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தலையிட்ட ஆப்பிள் நிறுவனம் அந்த பெண்ணிற்கு நஷ்ட ஈடுவழங்க முன் வந்துள்ளது. முன்னதாக பிக்கேட்டான் நிறுவனம் இந்த செயலை செய்த இருவரை பணியிலிருந்து நீக்கியது. தற்போது ஆப்பிள் நிறுவனம் அந்த தொகையை கொடுத்ததால் வழக்கு ரத்தானது. அந்த பெண் 5 மில்லியன் அமெரிக்க டாலர் கேட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் எவ்வளவு பணம் கொடுத்தது என்ற தகவல்கள் இல்லை.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறும் போது : “இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இப்படி கண்டிப்பாக நடந்திருக்க கூடாது. இதன் பின்பு ஆப்பிள் செல்போன்களை ரிப்பேர் செய்யும் ப்ரோட்டோகால்களை சீர்படுத்தியுள்ளோம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் நிச்சயம் தடுப்போம்” என கூறியது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்