கறிவேப்பிலை காம்பில் சூப் செய்வது எப்படி..

Date:

கறிவேப்பிலை இலையை மட்டுமே சமையலில் பயன்படுத்துவது உண்டு காம்பை குப்பையில் போட்டு விடுகிறோம் காரணம் அதன் மகத்துவம் அறிவதில்லை. கறிவேப்பிலை காம்பில் சூப் செய்முறையை பார்க்கலாம்.

செய்முறை:

கறிவேப்பிலை அதன் காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது – 15 வரை

துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/4
சிறிய வெங்காயம் – 3
பூண்டு – 2 பல்
தக்காளி – 1 சிறியது
கரம் மசால் பொடி-1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு

தாளிக்க

வெண்ணெய் – 1/2 தேக்கரண்டி
சோம்பு/ சீரகம் – 1/4 தேக்கரண்டி
மிளகு- 3

செய்முறை

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு அதனுடன் 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.

விசில் போனவுடன் மத்தால் நன்கு கடைந்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வடிகட்டி வைத்துள்ள சூப்பை இதில் ஊற்றி கொதிக்க விடவும்.

அதனுடன் கரம் மசால் பொடி சேர்க்கவும்.

கடைசியாக சூப்பை இறக்கி அதில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

சத்தான சுவையான கறிவேப்பிலை காம்பு சூப் ரெடி.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்