ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையரான ராசிகா ஜே.டி.எஸ். அபுதாபியில் நேற்று நடைபெற்ற பிக் டிக்கெட் ஜாக்பொட் சீட்டிழுப்பு போட்டியில், 15 மில்லியன் திர்ஹாம் (4 மில்லியன் அமெரிக்க டொலர்) வென்றுள்ளார்.
வெற்றியாளர் தனது டிக்கெட்டை மே 29 அன்று வாங்கியிருந்தார். அதன் இலக்கம் 213288. அபுதாபியில்அவர் பரிசு பணப்பையை மற்ற 8 பேருடன் பகிர்ந்து கொள்வார்.
ரசிகா துபாயில் சிவில் இன்ஜினியராக பணிபுரிகிறார். ஆனால் ராஸ் அல் கைமாவில் வசிக்கிறார். அவர் வென்ற டிக்கெட்டை கடந்த மாத பிக் டிக்கெட் வென்ற மொஹமட் மிஷ்பாக் தேர்வு செய்தார்ஃ மொஹமட் மிஷ்பாக் 12 மில்லியன் திர்ஹாம் வென்றிருந்தார்.
வியாழக்கிழமை சீட்டிழுப்பிற்குப் பிறகு கல்ஃப் செய்தியுடன் பேசும்போது, ரசிகாவால் அவரது உற்சாகத்தை அடக்க முடியவில்லை. “என் வாழ்க்கை மாறுகிறது,” என்று அவர் கூறினார்.



