கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார பணிமனையினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி நாளை 1ஆம் திகதி ஜே/367, ஜே/364 கிராம அலுவலகர் பிரிவினருக்கு திரு இருதயக் கல்லூரியிலும், 2ஆம் திகதி ஜே/376, ஜே/379 கிராம அலுவலகர் பிரிவினருக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 3ஆம் திகதி ஜே/377, ஜே/381 கிராம அலுவலகர் பிரிவினருக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 4ம் திகதி ஜே/351, ஜே/362 கிராம அலுவலகர் பிரிவினருக்கு மூத்தவிநாயகர் கோவிலடிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது.




