தனியார் வங்கியில் 910 மில்லியன் சுருட்டியவர் கைது!

Date:

மகரகமவிலுள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான 910 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான அந்த வங்கியின் முன்னாள் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

இந்த நிதி மோசடி சம்பவம் 2017-2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் வைப்பு செய்த பணத்தை அவர் திருடியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்தார்.

எனினும் சந்தேக நபர் நேற்றைய தினம் பிபிலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரை நுகேகொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஜூன் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

spot_imgspot_img

More like this
Related

உறுப்பு தானம் மூலம் பிறர் வாழ்வை வளப்படுத்தி மறையாத மாமனிதர்கள்!

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் உலக உடல் உறுப்பு...

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஊழியர்களின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில்...

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்