இஸ்ரேலின் தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக இருக்கலாம்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்!

Date:

காசா மீதான இஸ்ரேலின் கொடிய தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மைக்கல் பேச்லெட் இன்று (27)வியாழக்கிழமை, கூறினார்.

காசா மீதான இஸ்ரேலின் கொரூர தாக்குதலையடுத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தை கூட்ட வேண்டுமென முஸ்லீம் நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அமர்வு இன்று ஆரம்பித்தது.

இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பச்லெட் அம்மையார், இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

“இதுபோன்ற தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக இருக்கலாம். காசாவில் உள்ள பாலஸ்தீனிய போராளி குழு ஹமாஸ், இஸ்ரேல் மீது கண்மூடித்தனமான ரொக்கெட்டுகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும்“ என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கக்கூடாது’: ட்ரம்பை விமர்சித்த மக்ரோன்!

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களை...

ஈரானின் மிக உயர்ந்த பாலம் குண்டுவீசி அழிப்பு!

ஈரானை குண்டுவீசி "கற்காலத்திற்குத் தள்ளுவோம்" என்று அச்சுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு,...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்