தனியார் வங்கியில் 910 மில்லியன் சுருட்டியவர் கைது!

Date:

மகரகமவிலுள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான 910 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான அந்த வங்கியின் முன்னாள் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

இந்த நிதி மோசடி சம்பவம் 2017-2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் வைப்பு செய்த பணத்தை அவர் திருடியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்தார்.

எனினும் சந்தேக நபர் நேற்றைய தினம் பிபிலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரை நுகேகொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஜூன் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்