29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

கடும் காற்றினால் கூரை உடைந்து விழுந்து முதியவர் படுகாயம்!

வடக்கில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றினால் யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் வீட்டின் கூரைத்தகடு உடைந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் முகமாலை வடக்குப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இளையவி செல்லையா (86) என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.

வீட்டில் அவர் படுத்திருந்தபோது கூரைத்தகடு உடைந்து அவரின் தலையில் வீழ்ந்ததால் அவர் தலையில் படுகாயம் அடைந்துள்ளார்.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் தொடரும் காற்றினால் பெருமளவான மரங்கள் முறிந்துவீழ்ந்துவருவதுடன் பெருமளவான விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுவருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

Leave a Comment