26.4 C
Jaffna
March 29, 2024
உலகம்

கொரோனா பலி பிரேசிலில் 4,50,000-ஐ தாண்டியது!

பிரேசிலில் கொரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,50,000-ஐ தாண்டியது.இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 73,453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,194,209 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,173 பேர் பலியாக கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,52,031 ஆக அதிகரித்துள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஜனவரி முதலே கொரோனா அதிகரித்து வந்தது. சில நாட்கள் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு பிரேசிலில் அதிகரித்துள்ளது. பிரேசிலில் இதுவரை 18% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment