பாடசாலையில் திருடப்பட்ட பொருட்களை மீட்ட சம்மாந்துறை பொலிஸார்

Date:

பாடசாலை ஒன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்களை கொள்ளையிட்ட மூவர் உட்பட  நால்வரை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மலையடி கிராமம் அல் அர்சாத்  பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி உபகரணங்கள் பல களவாடப்பட்டுள்ளதாக   18.05.2021 அன்று பாடசாலை அதிபரினால்  சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய செவ்வாய்க்கிழமை(25) காலை   அம்பாறை  சம்மாந்துறை  பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர்  நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய    சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி கே.சதிஸ்கர் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜனோசன்   தலைமையில்  சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களான  ஜெயகுமார் துரைசிங்கம்  குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால்  கொள்ளையர் குழு மூவர் களவாடப்பட்ட பொருளை கொள்வனவு செய்த மற்றுமொருவர் உள்ளடங்கலாக நால்வரை  கைது செய்தனர்.

கைதான கொள்ளையர் குழு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் 23 ,25, 21  வயதினை உடைய இளைஞர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த கொரோனா அனர்த்தம் ஆரம்பமான காலத்தில் இருந்து  இக்குழு  இச்சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் களவாடப்பட்ட பொருட்கள்  3 இலட்சத்திற்கும் அதிகளவான பெறுமதியானதாகவும் இதில்  நிழற்பிரதி இயந்திரம் கணனி உபகரணங்கள் மைக்குகள் கொரோனா வெப்பநிலை இயந்திரம் உள்ளிட்ட  பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைதான நால்வரும் இன்றைய தினம்(25) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஈஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

-dilan-

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்