சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் எண்ணிக்கை ; இந்திய தூதரகம் தகவல்!

Date:

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நாடு திரும்ப உதவும் வந்தே பாரத் மிஷன் மூலம், கடந்த ஆண்டு மே முதல் மொத்தம் 87,055 இந்தியர்கள் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்றுநோயால் வேலை இழப்பு, குடும்ப நிர்ப்பந்தம் மற்றும் குடும்பத்தில் மரணம் ஆகியவை காரணமாக இந்தியர்கள் வீடு திரும்ப வேண்டிய சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு வந்தே பாரத் மிஷனை செயல்படுத்தியது.

“கடந்த ஆண்டு மே முதல் இந்த ஆண்டு மே 18 வரை 629 வந்தே பாரத் விமானங்கள் 87,055 பயணிகளை ஏற்றிச் சென்றன” என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் மூன்று வெவ்வேறு அமைச்சகங்களின் தனி கூட்டு அறிக்கையில் வந்தே பாரத் மிஷன் விமானங்களின் ஒரு பகுதியாக சராசரியாக 180 இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்கின்றனர் என்று சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது.

“இந்த விமானங்களில் சராசரியாக சுமார் 180 பயணிகள் இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 25 விமானங்கள் சிங்கப்பூருக்கு வருகை தருகின்றன” என்று போக்குவரத்து, வெளியுறவு மற்றும் மனிதவள அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 61,799 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்