கண்ணீர் விட்டு அழுத பிரதமர் மோடி!

Date:

கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் போது, பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பாதிப்புகள் பதிவாகி வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கருப்பு பூஞ்சை தொற்றும் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா 2ஆவது அலை தொடர்பாக வாரணாசியில் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்த அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என நெகிழ்ச்சியாக கூறும்போது கண்கலங்கி விட்டார்.

கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற பிரதமர் மோடி, மக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளது. வரும் நாட்களில், அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம் என்றார்.

குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை தொற்று புதிய சவாலாக மாறியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்