கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபு தொடர்பான இரண்டு நாள் நாடாளுமன்ற விவாதத்தின் இறுதி நாள் இன்று காலை நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும்.
திருத்தங்களைத் தொடர்ந்து இன்று மாலை வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
சட்டவரைபின் பல உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்த பின்னர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததோடு நேற்று ஒத்திவைப்பு விவாதம் தொடங்கியது.




