நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு!

Date:

நேபாள நாட்டில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

நேபாள நாட்டில் இன்று அதிகாலை 5.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் லம்ஜங் மாவட்டம் ஹல்ப்ஹலி என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய – மத்தியதரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முதல்கட்ட தகவல்கள் இன்னும் வெளியாகியுள்ளன. அதேபோல், நேபாளத்தின் போக்ஹரா பகுதியில் இருந்து கிழக்கே 35 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு நேற்று இரவு 11.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.3 ஆக அந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்