காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட சம்பவம்; ஆண் பெண் சமம் என்பதை நிரூபித்த தம்பதி!

Date:

மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டீல், ஷார்துல் கதம் ஆகியோர் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட போது ஷார்துல் கதம் தனது காதலியிடம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை குறிக்கும் வகையில் திருமணம் இருக்க வேண்டும் என கூறினார்.

அதற்கு காதலியும் சம்மதிக்க, இருவரும் தாலியை மாறி மாறி கட்டிக்கொள்ள முடிவெடுத்தனர். இவர்களின் முடிவுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஜோடிகள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.

பின்னர் இருவரும் தாலியை மாறி மாறி கட்டிக்கொண்டனர். சாகும் வரை இருவரது கழுத்தில் இந்த தாலி இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்தனர். இந்த வினோத திருமணத்தின் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட தம்பதிகள்! அதிர்ந்த உறவினர்கள் - கனடாமிரர்

 

Views: – 18

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்