வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையின் நோயாளர் காவு வண்டியின் சாரதியாக பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த குறித்தசாரதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் குறித்த சாரதிக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் வவுனியாவில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளர்களை, கொரோனா வைத்தியசாலைக்கு ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோசை ஐனவரி மாதமும், இரண்டாவது டோசை நேற்று முன்தினமும் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1