டோக்கியோ சுமோ மல்யுத்த போட்டியில் தலையில் காயமடைந்த வீரர் உயிரிழப்பு;அதிர்ச்சி சம்பவம்!

Date:

ஜப்பான்: டோக்கியோவில் நடைபெற்ற சுமோ மல்யுத்த போட்டியின் போது தலையில் காயமடைந்த வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ நகரில் கடந்த மார்ச் 26ம் தேதி சுமோ மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் 28 வயதான மிட்சுமி அமானோ கலந்து கொண்டார். அப்போது எதிர் போட்டியாளருக்கும் இவருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றதில் மிட்சுமி அமானோ தூக்கிவீசப்பட்டார்.

அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியின் போது மிட்சுமி அமானோ கீழே விழுந்து அசைவின்றி காணப்பட்ட வீடியோ வெளியானது.

அந்த வீடியோ அப்போதே பலரால் பகிரப்பட்டு, உடனடியாக மருத்துவ உதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சுமோ போட்டி விதிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மல்யுத்த போட்டியில் கலந்துகொண்ட வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் போது காயமடைந்த சுமோ மல்யுத்த வீரர் உயிரிழப்பு | Sumo wrestler  dies one month after suffering a concussion in Japan | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்