முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் நேற்று முன்தினம் (29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்ததோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்தது. முற்றாக எரிந்த ஒரு கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்குள்ளானார்.
முத்துஐயன் கட்டை சேர்ந்த செல்லப்பா அரிராசசிங்கம் (72) என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
2
+1