மட்டக்களப்பு காட்டுக்குள் இரகசியமாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்: காட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது கூட்டமைப்பு!

Date:

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலர் பிரிவில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தில் நூற்றிற்கும் அதிக ஏக்கர் நிலப்பரப்பை சுருட்டி, பௌத்த மத்திய நிலையம் அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புளுட்டுமானோடை பகுதியிலுள்ள காட்டு பகுதியில், பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான முன்னாயத்தங்கள் இடம்பெற்று வருகிறது.

சில தினங்களின் முன்னர் பிக்குகள் சிலர் அங்கு வந்து இடத்தை உறுதி செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோ.கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

பாதையற்ற பகுதியான அங்கு, சுமார் 7 கிலோமீற்றர் தூரத்தை கால்நடையாகவே கடக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்