வடக்கு சுகாதார தொண்டர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இணைக்கப்பட்டனர்!

Date:

வடமாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 388 பேரையும், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவித்தல், ஜனாதிபதி செயலகத்தினால், பல்நோக்கு செயலணி திணைக்களத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார தொண்டர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு குறித்து சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, அவர்களின் நியமனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அவர்கள் ஆளுனர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கக அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்