இந்தியாவின் நிலை குறித்து சுந்தர் பிச்சை மனம் வருத்தம்;மருத்துவ செலுவுகளுக்காக கூகுள் ரூ.135 கோடி!!

Date:

உலகம் ஒரு உலகளாவிய தொற்றுநோய்க்கு ஆளாகி வருகிறது, அனுதினமும் கொடூரமாக மாறிக்கொண்டே போகும் COVID-19 தொற்றுநோயை முன்வரிசையில் நின்று எதிர்கொள்ளும் – மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி கூறும் விதமாக, உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுள் ஒரு டூடுலை வெளியிட்டுள்ளது.

கூகுள் தேடல்களின் போது காணப்படும் இந்த டூடுலை கிளிக் செய்யும் போதும், கர்ஸரை அதன் மேல் வைக்கும்போதும் “அனைத்து பொது சுகாதார ஊழியர்களுக்கும், அறிவியல் சமூகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்றி” என்று எழுதப்பட்ட ஒரு உரை தோன்றுகிறது.மேலும், Google-இன் G என்கிற அனிமேஷன் எழுத்தானது ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் ஹார்ட் ஈமோஜி பறந்து சென்று முன்கள பணியாளர்களான “e” என்கிற அனிமேஷன் மீது விழுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 3,52,991 புதிய கோவிட் -19 கேஸ்களையும் 2,812 இறப்புகளையும் பதிவு செய்தது. இது கடந்த ஒரு வாரத்தில் 22.5 லட்சம் புதிய கோவிட் -19 கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இது உலகம் கண்டிராத மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும், மேலும் இது இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை விளிம்பிற்கு தள்ளி கொண்டே போகிறது என்பது மிகவும் கவலைக்குரியது.

இதுபற்றி, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து கூறுகையில், “இந்தியாவில் மோசமடைந்து வரும் கோவிட் நெருக்கடியைக் கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானேன்”.

கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கும், யுனிசெப்பிற்கும் ரூ.135 கோடியை மருத்துவ பொருட்கள் மற்றும் மானியங்களுக்காக வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்