நேற்று 793 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 101,379 ஆக அதிகரித்துள்ளது. </
நேற்று, சிறைச்சாலைகளுக்குள் இருந்து 10 பேரும், பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 773 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 10 பேரும் தொற்றுடன் அடையாளம காணப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்த 156 பேர் நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,311 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 6,424 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று சந்தேகத்தில் 638 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.




