உலகம் ஒரு உலகளாவிய தொற்றுநோய்க்கு ஆளாகி வருகிறது, அனுதினமும் கொடூரமாக மாறிக்கொண்டே போகும் COVID-19 தொற்றுநோயை முன்வரிசையில் நின்று எதிர்கொள்ளும் – மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி கூறும் விதமாக, உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுள் ஒரு டூடுலை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 3,52,991 புதிய கோவிட் -19 கேஸ்களையும் 2,812 இறப்புகளையும் பதிவு செய்தது. இது கடந்த ஒரு வாரத்தில் 22.5 லட்சம் புதிய கோவிட் -19 கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இது உலகம் கண்டிராத மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும், மேலும் இது இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை விளிம்பிற்கு தள்ளி கொண்டே போகிறது என்பது மிகவும் கவலைக்குரியது.
இதுபற்றி, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து கூறுகையில், “இந்தியாவில் மோசமடைந்து வரும் கோவிட் நெருக்கடியைக் கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானேன்”.
கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கும், யுனிசெப்பிற்கும் ரூ.135 கோடியை மருத்துவ பொருட்கள் மற்றும் மானியங்களுக்காக வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




