நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யவுள்ள தகவலை முன்னரே அறிந்திருந்தால், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாமென கூறியிருக்கிறார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை.
கண்டியில் ஊடகங்களுடன் பேசிய இராஜாங்க அமைச்சர், ரிஷாத்தை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சுட்டிக்காட்டினார்.
வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற அமர்வில் ரிஷாத்தை நானும் பார்த்தேன். அனைத்தும் தாமதமாகவதற்கு முன்னரே அதிகாரிகள் செயற்பட்டனர் என்றார்.



