25.9 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

அதிகரிக்கும் கொரோனா நிலையில் ஐபிஎல் தேவையா? கில்கிறிஸ்ட் விமர்சனம்!

இந்தியாவில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும் என ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட்

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் எனப் பலரும் கூறி வருகிறார்கள். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டும் இதை வலியுறுத்தியுள்ளார்.

புதிய உச்சம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாகவே லட்சத்தைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, நேற்று மட்டும் 3,46,786 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஐபிஎல் கடும் கட்டுப்பாடு:

இந்நிலையில், ஐபிஎல் 14ஆவது சீசன் கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்த தேவ்தத் படிக்கல், அக்சர் படேல் போன்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு பெரிய அளவில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. குறிப்பாக, வீரர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் விளையாடி வருகின்றனர்.

கில்கிறிஸ்ட் ட்வீட்:

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. போட்டி நடந்துகொண்டிருக்கும்போது ட்வீட் வெளியிட்ட ஆடம் கில்கிறிஸ்ட், “இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றது இல்லையா? அல்லது மக்களைத் திசைதிருப்பவே போட்டிகள் நடத்தப்படுகிறதா? எதுவாயினும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இந்த ட்வீட் வைரலானது. கில்கிறிஸ்ட் எழுப்பும் கேள்வி நியாயமானதுதான். ஐபிஎல் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என சிலர் ரீட்வீட் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பலர், நாங்கள் இப்போது வீட்டிற்குள் முடிங்கியுள்ளோம். எங்களுக்கு சிறந்த பொழுது போக்காக ஐபிஎல் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 25,52,940ஆக உள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 1,38,67,997 போர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,19,838 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment