பொலிகண்டி பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதென நம்பப்படும் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் விவசாய செய்கைக்காக நிலத்தை பண்படுத்திய போது, கொள்கலன் ஒன்றிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
1995 யாழ்ப்பாண இடப்பெயர்விற்கு முன்னர் அந்த பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நீதிபதி பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து அவை அகற்றப்படும். தற்போது அந்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



