25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

நாடாளுமன்ற அசம்பாவிதங்களை விசாரணை செய்ய குழு!

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

நேற்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து சபாநாயகர் வருத்தம் தெரிவித்ததோடு, விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த சம்பவம் குறித்து குழு முழுமையான விசாரணை நடத்தும் என்றும் அறிக்கையின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

நாடாளுமன்றத்திற்குள் நேற்று அறிவிக்கப்பட்ட சில சம்பவங்களை விசாரிக்க ஆளும் கட்சி இன்று கோரிக்கை விடுத்ததையடுத்து சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே தாக்கப்பட்டதாக கூறினார்.

பாராளுமன்ற காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவர் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதுபோன்ற ஒரு மோசமான சூழ்நிலைக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளை கொண்டுவருவதைத் தவிர்க்குமாறு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்ற காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கேள்விக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்ட சில ஆவணங்கள் குறித்தும் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.

ஆவணங்கள் சட்டத்திற்கு எதிரானவை என்றும் அவை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது என்றார்.

பாராளுமன்ற சட்டத்தின்படி, அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் தீங்கிழைக்கும் அறிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் பாராளுமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படாது என்று சபைத் தலைவர் தெரிவித்தார்.

இதுபோன்ற ஆவணங்கள் பாராளுமன்றத்திற்குள் கொண்டு வரப்பட்டால் அது ஆபத்தான நிலைமை என்றார்.

எனவே இரண்டு சம்பவங்கள் குறித்த விசாரணைகளை உடனடியாக தொடங்குமாறு அமைச்சர் குணவர்தன சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.

பதிலளித்த எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, அறைக்குள் கொண்டு வரப்பட்ட ஆவணங்களை விசாரிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றார்.

இதற்கிடையில், பாராளுமன்ற நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் வழியாக ரேநரலையாக ஒளிப்பரப்பப்படுவது பற்றி விசாரிக்க விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

சபைக்குள் பதட்டமான சூழ்நிலைகளை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு அனுமதி இல்லை, ஆனால் சில எம்.பி.க்கள் இந்த சம்பவத்தை சமூக ஊடகங்கள் வழியாக ஒளிபரப்பினர். இது நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிரானது என்று கூறி, அமைச்சர் நமல் ராஜபக்ஷ சபாநாயகரிடம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தன சம்பவங்கள் குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment