நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!!

Date:

ஐபிஎல் 14ஆவது சீசன் 12ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கி 188/9 ரன்கள் அடித்தது.

மெகா இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் மேனன் ஓரா, சஞ்சு சாம்சன் விக்கெட்களை மட்டும் இழந்து, 81/2 ரன்கள் குவித்தது. இதனால், களத்தில் தோனி கோபமாகக் காணப்பட்டார். முதல் போட்டியில் சிஎஸ்கே இதே 188 ரன்கள் அடித்து, தோல்வியைச் சந்தித்தது. அதே தவறு நடந்துவிடக் கூடாது என்பதில் தோனி அதிக கவனமுடன் இருந்தார்.

சாஹர், ஷார்துல் சொதப்பல்:

இப்போட்டியில் ராகுல் சாஹர், ஷார்துல் தாகூர் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மைதானம் கட்டர்களுக்குச் சாதகமாக இருந்ததால், இருவரும் தொடர்ந்து அதே பந்துகளை வீசினர். சரியான லென்த்தில் கட்டர்களை வீசாமல் ஷார்ட் பந்துகளாக வீசியதால் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்தனர். தோனியின் கோபத்தை அதிகரித்தது இதுதான்.

ஜடேஜா அபாரம்:

முதல் 10 ஓவர்கள் முடிந்த பிறகு, 12ஆவது ஓவரில் தோனி ஜடேஜாவை வரவழைத்தார். ஜடேஜா முதல் பந்தைக் காலுக்கு அருகில் போட்டதால், தொடர்ந்து ஷார்ட் பந்துகளை அடித்து விளையாடிக் கொண்டிருந்த பட்லர் செய்வதறியாது அடித்து ஆட முற்பட்டார். இறுதியில் பந்து போல்டை பதம் பார்த்தது. அதே ஓவரின் இறுதிப் பந்தில் ஷிவம் துபேவும் அவுட் ஆனார். இதனால், ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி அதிகமானது. ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு இந்த ஓவர்தான் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பந்து ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு தரத்துவங்கியதால், பிராவோவை ஓரம்கட்டிவிட்டு அடுத்த ஓவரில் மொயின் அலிக்கு வாய்ப்பு கொடுத்தார் தோனி. எதிர்பார்த்ததுபோல் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். அடுத்தடுத்து ரியம் பராக், கிறிஸ் மோரிஸும் ஆட்டமிழந்தார்கள்.

பனியின் காரணமாக, பொதுவாகவே இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்குதான் மைதானம் சாதகமாக இருக்கும். ஆனால், இன்றைய போட்டியில் நிலைமை அப்படியல்ல. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தது. இதனை தோனி சரியான நேரத்தில் கணித்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...

சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி?: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்