தமிழர்கள் கொல்லப்பட்ட போது தெற்கில் யாரும் குரல் கொடுக்கவில்லை; ஆனால் இயேசுவின் போதனைகளின்படி அவர்களிற்காக நாம் குரல் கொடுப்போம்: யாழ் குரு முதல்வர்!

Date:

30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வடபகுதியில் ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன.  தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது.

ஆனால், பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள் என இயேசு சொன்னதற்கு இணங்க, அவர்களுடைய துன்ப வேளைகளில் எங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியது எங்களுடைய கிறிஸ்தவ மக்களுடைய கடமையாகும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் தென் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதிப்படைந்த மக்களுக்கான  இரண்டாவது ஆண்டு நிகழ்வு நாளை புதன்கிழமை 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

எங்களுடைய நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வடபகுதியில் எத்தனை ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன. எத்தனையோ மக்கள் இறந்தார்கள். தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிச்சயமாக இருக்கின்றது. அது உண்மைதான். இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது.

ஆனால் சரியான ஒரு காரியத்தை ஒருவர் செய்யவில்லை என்பதற்காக சரியான ஒரு காரியத்தை நாங்கள் செய்யாது இருக்கக்கூடாது. ஆண்டவர் இயேசு சொல்லுவார் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. அதேபோல் அவர்களுடைய துன்ப வேளைகளில் எங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியது எங்களுடைய கிறிஸ்தவ மக்களுடைய கடமையாகும். ஆகவே நாளைய தினத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நாங்கள் செய்து எங்களுடைய ஆதரவினையும் அஞ்சலி களையும் செலுத்துவதற்கு முன் வருவோம்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் கட்டுவப்பிட்டி  செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் இருக்கின்ற உல்லாச விடுதிகள் இவைகளில் இடம்பெற்ற பயங்கரமான குண்டு  வெடிப்பிலே நூற்றுக்கணக்கான மக்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள் பலர் அங்கவீனமானார்கள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன இதனுடைய இரண்டாவது ஆண்டு நினைவை நாடு முழுவதும் அனுஷ்டித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையினையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கொழும்பு உயர் மறைமாவட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இதன்படி நாளைய தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திலும் கட்டுவாப்பிட்டிய செபஸ்தியர் ஆலையத்தின் நினைவு அஞ்சலி களும் ஆராதனைகளும் திருப்பலிகளும் ஒப்புக் கொடுக்கப் படுகின்றன ஏனைய மாவட்டங்களிலும் இந்த நினைவு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன எங்களுடைய யாழ்  மறை மாவட்டத்திலே உள்ள ஆலயங்களில் ஆலயங்களிலே 08:45 க்கு ஆலயமணி ஒலிக்கப்பட்டு மௌன அஞ்சலி கள் இடம்பெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் இந்த விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன எனவே அனைத்து மக்களும் அந்த பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் அத்தோடு அரசாங்கத்தினால்  நினைவஞ்சலியினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே ஈஸ்டர் தாக்குதல் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலிகள் நாளை காலை மரியன்னை ஆலயத்தில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்