கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 575ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த, 86 வயதான பெண் ஒருவர், ரிகில்லகஸ்கட மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியாவுடன் ஏற்பட்ட உக்கிர சுவாசிப்பதில் கடின நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான ஆண் ஒருவர், அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 நிமோனியா நிலை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாத நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த மார்ச் 31இல் நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.



